வானவனால் விண்ணிலிருந்து
மண்ணுக்கு வரையப்பட்ட
இடைவிடா இறக்கக் கோடுகள்
சில வேளைகளில் அது
தண்டனைக் கோடுகள்.
விவசாயிகள் புகழ்ந்துனிக்க
வியாபாரிகள் இகழ்ந்துனிக்க
சிறியோர்கள் குதூகலித்து
விளையாடினர் மழை நீரில்
சோ வென்ற மழை கண்ட
ஏழையின் வீட்டுக் கூரை
ஹோ வென்று அழுத்தப்பா
தன் நூறு கண்களினால்
வீதியெங்கும் சில மக்கள்
பல வர்ணக் குடைகளுடன்
தடுமாறி நின்றனரே
தான் ஒதுங்க இடம் தேடி
மீனுன்ன வெண் கொக்கு
ஆறான வயல் வெளியில்
ஓயாமல் அலைகிறதே
ஒய்யாரப் பார்வையோடு.
இளநெஞ்சன்
ரமீஸ்
No comments:
Post a Comment