Tuesday, May 25, 2010

உன் வாழ்க்கை உன் கையில்.

வாழ்க்கையின்
தத்துவத்தை
விளங்க வேண்டுமா?
உன் வாழ்க்கையை
முழுமையாக வாழ்ந்துபார்.

உன் வாழ்க்கையை
தூய நட்பின் மூலம்
அலங்கரித்துக் கொள்

துர் நடத்தைகளுக்கு
உன் வாழ்க்கையை
அடிமைப் படுத்தாதே

தீய
நண்பர்களைவிட்டும்
தூர விலகிச்செல்

உன் வாழ்க்கையை
நீ நேசி
உன் வாழ்க்கையும்
உன்னை நேசிக்கும்

வாழ்க்கை
கடலைவிட ஆழமானது
அதன் ஆழத்துக்குச்
சென்று பார், பல
அற்புதங்களைக்
காண்பாய்

உன் வாழ்க்கையை
ரசனை மிக்கதாக
மாற்றிக்கொள்

காரிருளுக்குள்
தொலைக்கக் கூடியதல்ல
உன்வாழ்க்கை
கைகளிலே வைத்துக்
கொண்டாடக்கூடியது

உன் வாழ்க்கையில்
தென்றல் மட்டுமல்ல
புயலும் வீசும்
சாய்ந்து விடாதே

உன் வாழ்க்கையை
ஒளிவிளக்காக்கிக்கொள்
ஏனையோரும்
ஒளி பெறட்டும்

உன் வாழ்க்கையை
ஒரு கலையாக
மாற்றிக்கொள்
பின்னோர்கள்
ரசிக்கட்டும்

வாழ்க்கையில்
பயத்தை
விட்டுவிடு
பகுத்தறிவோடு வாழ்
உலகம் உனக்காகக்
காத்திருக்கும்
என்றும் வெற்றி
உன் கையிலே.

இளநெஞ்சன்
ரமீஸ்

No comments:

Post a Comment