
என் இதயம் கவர்ந்தவளே
என் நினைப்பை பரித்தவளே
நீ இருக்கும் திசை தேடி
என் கண்கள் அலைகிறதே
பூ இருக்கும் இடம் தேடி
வண்டுகளும் செல்வது போல்
நீ இருக்கும் இடம் நோக்கி
என் உள்ளம் செல்கிறதே
நான்கு கண்கள் சந்திக்க
இதழ்கள் இரண்டும் மெளனிக்க
இதயம் இரண்டும் சிறகடித்து
இடம் மாறியது தாமாகவே
என் மனதில் உள்ளவற்றை
உன்னிடத்தில் கொட்டிவிட்டேன்
இரு நொடிகள் செல்வதற்குள்
உன் இதயம் தந்து விட்டாய்
உன் மனதை ஆளுகிறேன்
உன் நினைவில் வாடுகிறேன்
உன் மடியில் முகம் புதைக்கும்
நாள் எண்ணி ஏங்குகிறேன்
அன்புக்கு அன்னையாகவும்
அரவணைப்புக்கு தாரமாகவும்
அறிவுக்கு ஆசானாகவும்
உதவிக்கு உற்ற தோழியாகவும்
என்றென்றும் நீ இருப்பாய் என்
எதிர்காலப் பூங்கொடியே.
இளநெஞ்சன்
ரமீஸ்
No comments:
Post a Comment