கரும்பாரையின் உறுதி பெற்று
கற்றபடி செயல் நடந்து
சவால்களை வென்றிடுவோம்
சாத்தானை விரட்டிடுவோம்.
தீயோரின் தீங்குகளை
அடியோடு அழித்திடுவோம்
வானவனின் சொற்படி நாம்
அனைவருமே நடந்திடுவோம்
ஏழைகளின் சிரிப்பினில் தான்
சுவர்க்கமது இருக்கிறதாம்
ஏழைகளுக் குதவி செய்து
நம் நலனைக் கூட்டிடுவோம்
Tuesday, May 25, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment