இதயக் கதவை மெதுவாகத் தட்டினேன்
இறுக்கமாக மூடிக் கொண்டாய்
இடை விடாது தட்டினேன்
இடையூறு தருவதாக
இன்ஸ்பெக்டரிடம் சொல்லிவிட்டாய்
பாடசாலை நேரங்களெல்லாம்
பாடங்களைக் கட்டடித்து
பருவ மங்கை உனைக்கான
பதுங்கி அலைந்தேன்
பாசத்துடன்
அந்தி மாலை நேரங்களில்
அரசியல் பாட வகுப்பென்று
அம்மாவிடம் சொல்லிவிட்டு
அன்பே உனைத் தேடி வந்தேன்
இவ்வளவு செய்த பின்னும்
இதயம் சற்றும் இலக வில்லை
இன்னும் என்ன செய்ய வேண்டும்
இவனை சற்று நினைப்பதற்கு?
இளநெஞ்சன்
ரமீஸ்
No comments:
Post a Comment