
கருவில் இருந்து இன்று வரைக்கும்
கவலை மறந்து ஒன்றாய் பறந்தோம்
சிறு வயதினில் வயல் வெளிகளில்
சிறகடித்து நாம் திரிந்தோம்.
பூந்தோட்டம் மலைகளெங்கும்
பூப்போலே நாம் அலைந்தோம்
காடு, ஓடை குளங்கலெல்லாம்
காட்டாறாய் நாம் புரண்டோம்
இத்தனையும் என் வாழ்வில்
இனி நடப்பது வெறும் கனவே
ஏனென்றால் இன்று முதல்
ஏகன் வசமுன் உயிருள்ளது
விதி எந்தன் வாழ்க்கையிலே
விளையாடித் தீர்த்ததுவே
மதிநுட்பம் உள்ளவரும்
மலைத்துப் போய் நிற்பார்கள்.
இளநெஞ்சன்
ரமீஸ்
No comments:
Post a Comment