தந்தை என்ற சொல்லுக்கொரு
தக்க விளக்கமாய் அக்கறையோடு
எம்மை வளர்ப்பீர் பேரன்போடு
உலகத்தில் நான் வாழ பண்போடு
வாழ்க்கை முறையை கற்றுத் தருவீர்
வளமான வாழ்வில் என் கால் பதிப்பீர்
தாழ்வும் உயர்வும் வாழ்வென சொல்வீர்
சிறப்பான வாழ்வின் முன்னோடி ஆவீர்
என்றெல்லாம் எதிர் பார்த்தேன் - அன்று
முதல் கால் நிலம் பதித்து நின்றேன்
ஆனாலும் மறு கணமே என் செவியில்
"குளந்தாய் உன் தந்தை இறந்து விட்டார்".
அன்று முதல் முடக்கப்பட்டது எனதாசை
நான் ஏது வித்தியாசமாய் அசை கொண்டேன்?
ஏனையோரின் ஆசை போன்று நானும் கொண்டேன்
எனதாசை ஏன் என் மேல் வஞ்சம் கொண்டது?
இருந்த போதும் என் பிராத்தனையில் தந்தையே!!
உனக்கு சுவனம் கிடைப்பதற்காய் வேண்டுகிறேன்
அங்காவது உன்னுடன் நான் வாழ ஏங்குகிறேன்
ஏற்றுக்கொள்வாய் என் பிராத்தனையை இறைவனே!!
No comments:
Post a Comment