Wednesday, June 9, 2010

பொறாமையால் சீரழிந்த ஒரு ஹாஸ்டல் நட்பு.

ஆருயிர் நண்பனே
எனைக் குற்றுயிராய்
ஆக்கியதன் நோக்கம்
என்னவோ?

நாம் இங்கு
தனிமையில்
நடந்ததை விட
இருவரும்
கை கோர்த்து
வளம் வந்ததுதான்
அதிகம்

நம் நட்பைப்
பற்றி ஒவ்வொரு
கட்டிடத்துக்கும்,
மரங்களுக்கும்,
ஏன் செடிகளுக்கும்
கூடத் தெரிந்திருந்தது

நம் நட்பைக்
கண்ட
பறவைகள் கூட
எங்களை வாழ்த்திச்
சென்றன

இறைவனுக்காய்
நம் நட்பைப்
பரஸ்பரம் பகிந்து
கொண்டதால்
நம் நட்பு
தூய்மையானது

இதனால்
பல தடைகளையும்
தாண்டி
வெற்றி நடை
போட்டது
நம் நட்பு

இவ்வாறு
நம் நட்பை
பல ஆண்டுகள்
பரஸ்பரம் பகிர்ந்து
கொண்டோம்

பல வருடம்
தொடர்ந்த பின்னும்
பொறாமையின்
காரணத்தால்
சிதைந்துபோனது
சில நொடியில்

நம் நட்பு
தூய்மையானதால்
பிரிவென்ற சொல்
நமக்கு
நிரந்தரமில்லை

ஓஹ் என்
இனிய நண்பனே!
என் இதயத்தில்
புதைந்திருக்கும்
துக்கங்கள் நீங்கவே
ஒரு நிமிடம் என்னுடன்
மனம் விட்டுப் பேசடா

காலத்தால்
அழியாத
நம் நட்பின்
சுவடுகள்
என்றென்றும்
என் இதயத்தின்
அரியாசனத்தில்
அமர்ந்திருக்கும்.

இளநெஞ்சன்
ரமீஸ்

No comments:

Post a Comment