Monday, November 28, 2011

சகோதரனுக்கு ஓர் உபதேசம்.

அதிகாலையில் விழித்திடு
இறை வேதத்தை ஓதிடு
பாடங்களைப் படித்திடு
என்றும் உள்ளத்தில் நிலைத்திடும்

சகோதரா! உன் மனதில்
நற்சிந்தனைகளை விதைத்து
சோம்பல் எனும் களைபிடுங்கி
என்றும் வெற்றியை அறுவடை செய்.

தோழர்கள் தடுமாறும் போடு கைகொடு
மனக் கஷ்டத்தின் பொது தோள்கொடு
தொல்விநேரும் பொது ஊக்கம் கொடு

கண்ட இடங்களில் அமர்ந்தபடி
வீணான விடயங்களைக் கதைத்து
அநியாயங்களை இளைத்து
நேரத்தை வீணடிக்காது
அறியாதவற்றை தேடிக் கற்றிடு.

உன் உடல் நலத்தை நாடு
சந்தர்ப்பப்படி ஓடி விளையாடு
நல்ல நபர்களைத் தேடு
வலக்கரத்தில் கிடைக்கட்டும் உன் ஏடு.

இளநெஞ்சன்

No comments:

Post a Comment