Tuesday, November 23, 2010
பிரியா விடை
சிறகு முளைத்த
வன்னத்துப்பூச்சுகள்
விடை பெறுகின்றன
பிரியாவிடையுடன்
உள்ளங்களில்
உண்மை வலிகளுடனும்
கண்களிலே
கண்ணீர்த் துளிகளுடனும்
வாங்கிய தண்டனைகளை
மறந்து
வாங்கச் சென்றன
ஆசிரியர்களிடம்
ஆசிர்வாதம்
எமது ஆட்டோகிராப் களில்
தமது எழுத்துக்களும்
ஜொலிக்க வேண்டுமென
பறந்து திரிந்தன
மின்மினிப் பூச்சிகள்
பிரிந்திடும் நேரத்திலும்
பலரது கண்கள்
பழகியதை தேடி
தோற்றுப்போயின
ஒன்றாய் கூடிக்
கும்மியடித்த
அத்திமரத்தடி,
திருட்டுத் தனமாய்
பிடுங்கித் தின்ற
மாம்பலம்,
சிறிய எல்லை வைத்து
கிரிகட் விளையாடிய
மைதான மத்தியில்
உள்ள பெயர் தெரியா
உயர்ந்த மரத்தடி
இவை
அனைத்தையும்
சூடு போட்டாலும்
மறக்க முடியுமா
மாண்புமிகு உறவுகளே.
Subscribe to:
Post Comments (Atom)
அருமை பாராட்டுக்கள்
ReplyDeletewww.tamilthottam.in
தமிழ்த்தோட்டம்