Tuesday, June 22, 2010

உயிரானவளே!!!

என்
எண்ணக்கீரல்களில்
கிருக்கப்படும்
உருவம்
நீ

என்
சிந்தனைச்
சிதரல்களில்
சிறகடிக்கும்
சிட்டுக்குருவி
நீ

என்
நெஞ்சக் குளத்தில்
குதித்து விளையாடும்
செல்ல மீன்குட்டி
நீ

என்
இதயத்தின்
புற்தரைகளில்
துள்ளி விளையாடும்
புள்ளி மான் குட்டி
நீ

என்
உள்ளம்
கொள்ளை போகும்
எழில் மிகு
உயிரோவியம்
நீ

என்
கண்களை
சொக்கவைக்கும்
எழில் கொஞ்சும்
இயற்கை அருவி
நீ

என்
இதயச்சுவர்களில்
புகைப்படமாய்
வடிக்கப்பட்டுள்ள
சித்திரம்
நீ

உன்
ஓரப்பார்வையால்
தினமும்
ஒரு கோடிப்
பூக்கள் மலரும்
என் இதயத்தில்

உன்
குளிவிலும் சிரிப்பு
அதுதான் என்
நாடித்துடிப்பு.

இளநெஞ்சன்
ரமீஸ்

Thursday, June 10, 2010

கனவில் வந்த தேவதை.

என்
இருண்ட விழிகள்
அவள் பிரகாசமான
முகத்தைக்
கண்ட மறுகணமே
மருண்டு நின்றன

தேவலோகப்
பெண்ணொருத்தி
இடம் மாறி வந்த
தென நினைத்தது
என் உள்ளம்

என் விழிகள் பார்த்தது
நிஜம் தானா
என உறுதிப்படுத்த
முயன்றன
என் கைகள்

அவள் குரலை
உள்வாங்கிய
காதுகளோ
வேறு குரலை
உள்வாங்க மறுத்தன

அவள் பாதம்பட்ட
சிறு கற்களை
மரியாதையாகத்
தொட்டன
என் கால்கள்

முயற்சியில்
தோல்வியுற்ற
கைகளோ
அவள் பாதம் பட்ட
சிறு கற்களை
பக்குவப் படுத்தின

அவள் கருங்கூந்தளைப்
பார்த்தேன்
இரவு அதன் திரைகளை
அவள் தலையில்
தொங்க விட்டதுவோ?
என நினைத்தேன்.

என் நெஞ்சக்
குளத்தின்
கரைகலெங்கும்
அவள் நினைவலைகள்
பரவலாக
மோதுகின்றன

பெண்ணே
இத்தனையும்
நிகழ்ந்தது வெறும்
கனவில் தான்

கனவில் வந்த
தேவதையே
நீ நனவில் வருவது
சாத்தியமா??
உன்னைத் தேடி
ஒரு இதயம்
அலைந்து திரியுது
பைத்தியமாய்.

இளநெஞ்சன்
ரமீஸ்

Wednesday, June 9, 2010

பொறாமையால் சீரழிந்த ஒரு ஹாஸ்டல் நட்பு.

ஆருயிர் நண்பனே
எனைக் குற்றுயிராய்
ஆக்கியதன் நோக்கம்
என்னவோ?

நாம் இங்கு
தனிமையில்
நடந்ததை விட
இருவரும்
கை கோர்த்து
வளம் வந்ததுதான்
அதிகம்

நம் நட்பைப்
பற்றி ஒவ்வொரு
கட்டிடத்துக்கும்,
மரங்களுக்கும்,
ஏன் செடிகளுக்கும்
கூடத் தெரிந்திருந்தது

நம் நட்பைக்
கண்ட
பறவைகள் கூட
எங்களை வாழ்த்திச்
சென்றன

இறைவனுக்காய்
நம் நட்பைப்
பரஸ்பரம் பகிந்து
கொண்டதால்
நம் நட்பு
தூய்மையானது

இதனால்
பல தடைகளையும்
தாண்டி
வெற்றி நடை
போட்டது
நம் நட்பு

இவ்வாறு
நம் நட்பை
பல ஆண்டுகள்
பரஸ்பரம் பகிர்ந்து
கொண்டோம்

பல வருடம்
தொடர்ந்த பின்னும்
பொறாமையின்
காரணத்தால்
சிதைந்துபோனது
சில நொடியில்

நம் நட்பு
தூய்மையானதால்
பிரிவென்ற சொல்
நமக்கு
நிரந்தரமில்லை

ஓஹ் என்
இனிய நண்பனே!
என் இதயத்தில்
புதைந்திருக்கும்
துக்கங்கள் நீங்கவே
ஒரு நிமிடம் என்னுடன்
மனம் விட்டுப் பேசடா

காலத்தால்
அழியாத
நம் நட்பின்
சுவடுகள்
என்றென்றும்
என் இதயத்தின்
அரியாசனத்தில்
அமர்ந்திருக்கும்.

இளநெஞ்சன்
ரமீஸ்